திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். விளாங்காடு பாக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், தனது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வரும் சிறுமியிடம், ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான். இதுகுறித்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், பாஸ்கரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவனை சிறையிலடைத்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments