Ticker

6/recent/ticker-posts

Ad Code

குழந்தைக்கு ஊட்டிய தாய்ப்பால் முதல், குளிரில் நடுங்கும் ஏழைகள் வரை தேடி உதவும் பெண் துணை ஆய்வாளர்

 மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரில் இரவு நேரத்தில் ரோந்து செல்லும் இந்த பெண் துணை ஆய்வாளர் அனிலா பிரசார் தனது நற்பணிகளால் பெரும் புகழ் பெற்று வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு பெண் குழந்தையை மீட்டு தனது தாய்ப்பாலை ஊட்டி அவர் பாராட்டுகளை குவித்தார்.தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலையில் குளிரில் நடுங்கியபடி உறங்கும் ஏழைகளுக்கு போர்வைகளை வழங்குகிறார். மருத்துவமனைகள், பேருந்து நிலையங்களில் ஏழைகளைக் கண்டறிந்து உதவுகிறார்.இதற்காக அவர் தனிக்குழுவையே உருவாக்கியுள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments