Ticker

6/recent/ticker-posts

Ad Code

வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதலாவது நிலையின் 3-வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகா வாட்டும், இரண்டாம் நிலையில், 2 அலகுகளில் தலா 600 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலாவது நிலையில் உள்ள 3-வது பிரிவில் நிலக்கரியை துகளாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments