Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்தியர்களுக்கு மீண்டும் அனுமதி -கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது இலங்கை

இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை மீண்டும் அனுமதியளித்துள்ளது. இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வருவதற்கு அனுமதி அளிக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் இருந்து வாரத்திற்கு நான்கு விமானங்கள் சென்னைக்கும், 3 விமானங்கள் மும்பைக்கும், ஒரு விமானம் பெங்களூருக்கும் இயக்கப்படும். விரைவில் கொழும்பில் இருந்து திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், டெல்லி ஆகிய நகரங்களுக்கு வாரம் ஒருமுறை விமானங்கள் இயக்கப்படும் என டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments