Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஈராக்கில் காவல்துறை சோதனைச்சாவடி மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். சலாஹூதீன் மாகாணத்தில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடி மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்ற இடத்தில் ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதிகள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 3 போலீசார் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 45க்கும் மேற்பட்டவர்கள் பலாட் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என காவல்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments