Ticker

6/recent/ticker-posts

Ad Code

'ஐ அம் ஸோ ஹேப்பி...' - நெகிழ்ந்து கண்கலங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்

தவெக தலைவர் விஜய்யை முதல்வராக பதவியேற்க கோரி ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார். நாளை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடக்கும் விழாவில் விஜய் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார்.

SAC
SAC

இந்நிலையில், முதல்வராகப் போகும் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மகன் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசியிருக்கிறார்.

விஜய் ஆளுநரை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய பிறகு ஆங்கில ஊடகத்தினரிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், 'எனக்கு அளவிட முடியாத அளவுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வாழ்நாளில் நான் செய்தவை எல்லாம் என் மகனுக்காக மட்டுமே. கடைசியில், தமிழக மக்கள் விஜய் வழியாக போராடி வென்றிருக்கின்றனர். விஜய் தமிழ் மக்களுக்காக எல்லாவற்றையும் செய்வார்' என கண்கலங்க நெகிழ்வாக கூறியிருந்தார்.

SAC
SAC

விஜய்யை சினிமா வழி அரசியலை நோக்கி நகர்த்தி சென்றதில் அவரின் தந்தையின் பங்கு முக்கியமானது. அவர்தான் விஜய்க்கென ரசிகர் மன்றங்களை உருவாக்கி அதை மக்கள் இயக்கமாக மாற்றி விஜய்யின் அரசியல் நுழைவுக்கு அடிகோலினார்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments