Ticker

6/recent/ticker-posts

Ad Code

`இது முடிவில்லை... விரைவில் சந்திக்கிறேன்!' வைரலாகும் ரோஜா சீரியல் நடிகர்களின் பதிவு

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் ரோஜா. இந்தத் தொடரின் கதாநாயகியாக நடித்த பிரியங்காவும் சரி, கதாநாயகனாக நடித்த சிபுவும் சரி புதுமுகங்களாக அந்தத் தொடரின் மூலம் அறிமுகமானவர்கள்.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக சன் டிவியில் ஒளிபரப்பாகியிருந்த இந்த நெடுந்தொடர் தற்போது நிறைவடைந்திருக்கிறது. இதுகுறித்து சிபுவும், பிரியங்காவும் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.

ரோஜா சீரியல் - சிபு பதிவு

சிபு சூர்யன், ` கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த அழகான பயணத்தில் எக்கச்சக்க அன்பைப் பெற்றிருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து `அர்ஜூன்' கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என என்னைத் தேர்வு செய்த சன் டிவிக்கும், சரிகமவிற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ரசிகர்களான உங்கள் அனைவருக்கும் அன்பும், அரவணைப்பும்! தொடர்ந்து உங்களுடைய ஆதரவு தேவை. சீக்கிரம் சந்திப்போம்!' எனப் பதிவிட்டிருக்கிறார்.

பிரியங்கா, ` என் லைஃப்ல இந்த 4 + ஆண்டுகள் மறக்கமுடியாத பயணம். ஒரு வார்த்தைகூட தமிழ் தெரியாம இங்க வந்த என்னை நீங்க எல்லாரும் உங்க வீட்டு பொண்ணா ஏத்துக்கிட்டீங்க! இந்த 4 + ஆண்டுகளில் நிறைய நிறைய லவ் எனக்காக நீங்க எல்லாரும் கொடுத்துருக்கீங்க.. உங்களோட அன்புக்கு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல... ஆனா, உங்க எல்லாருடைய அன்பும் கிடைச்சதுக்கு நான் ரொம்ப ஆசிர்வதிக்கப்பட்டவள்! ரோஜாவாக மட்டுமில்லாமல் உங்கள் அனைவருடைய இதயத்திலும் இடம் கிடைக்க வாய்ப்புக் கொடுத்த சரிகமவிற்கும், சன் டிவிக்கும் என் நன்றிகள்!

ரோஜா சீரியல் - பிரியங்கா பதிவு

நிறைய நல்ல ஞாபகங்களோட, நிறைய நல்ல உள்ளங்களோட அன்பு, ஆசிர்வாதத்துடன் ரோஜாவிலிருந்து கிளம்புகிறேன். இது முடிவில்லை! இன்னொரு புது தொடக்கத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.. என்றும் அன்புடன், பிரியங்கா!' எனப் பதிவிட்டிருக்கிறார்.



from Latest News

Post a Comment

0 Comments