Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்று தொடங்குகிறது தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகம் முழுவதும் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 12,838 பதவியிடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர், காலை 10 மணி முதல் வேட்புமனுக்களை அளிக்கலாம். நாளையும் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நிகழ்வுகளை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்திட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

image

பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் 1000 ரூபாயும், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் 2,000 ரூபாயும், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் 4,000 ரூபாயும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், இதில் பாதியை செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7-ஆம் தேதி கடைசி நாள். பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து, அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி உள்ளார். காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், மாநில தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வேட்புமனுத் தாக்கல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பறக்கும் படை கண்காணிப்பு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது உள்ளிட்டவை குறித்து மாநில தேர்தல் ஆணையர் அறிவுரைகளை வழங்கினார்.

சமீபத்திய செய்தி: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு: விடிய விடிய போராட்டம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments