Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறப்பு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தாம் நடத்தி வந்த சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 போக்சோ வழக்குகள் உட்பட 5 வழக்குகளில் சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். வழக்கில் கூடுதல் ஆதாரங்களை திரட்டும் பொருட்டு, தீவிர விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சோதனை நடத்துகின்றனர். சுஷில் ஹரி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அந்த ரகசிய அறையை, சிவசங்கர் பாபாவின் கைரேகையை பயன்படுத்தி திறந்த சிபிசிஐடி போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டு, அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்கின்றனர். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments