Ticker

6/recent/ticker-posts

Ad Code

திருவள்ளூரில் பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்ததால் பழுதாகி நின்ற இருசக்கர வாகனங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்ததால் இருசக்கர வாகனங்கள் பழுதாகி நின்றன. திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிலையத்தில்  நேற்று இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தபோது பெட்ரோல் பம்பில் இருந்து தண்ணீர் கலந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர் இதனை அடுத்து வாகன ஓட்டிகளுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.         

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments