Ticker

6/recent/ticker-posts

Ad Code

சென்னையில் மருத்துவரை கத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது!

சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே மருத்துவரை கத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.  வானகரத்தைச் சேர்ந்த  மருத்துவர் வெங்கட்ராமன் என்பவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். மதுரவாயல் மேம்பாலம் அருகே சென்ற போது அவரை வழி மறித்த மர்ம கும்பல்  விலை உயர்ந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளது. ஆனால் வெங்கட்ராமன் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த கும்பல் கத்தியை சரமாரியாக தாக்கி விட்டு செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3பேரை கைது செய்தனர்.       

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments