Ticker

6/recent/ticker-posts

Ad Code

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு.. தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் வரும் 3ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 3ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.      

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments