Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஆகஸ்ட் 2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு

ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம், கல்வித் தொலைக்காட்சி வழியில் பாடம் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல், பள்ளி வளாகங்களை பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை தரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க அரசு பரிசீலித்து வரும் நிலையில், ஆசிரியர்களை தினந்தோறும் பள்ளிக்கு வருகை புரிய உத்தரவிட்டுள்ளது பள்ளிகள் விரைவில் திறக்கப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments