Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழகத்தில் மீண்டும் 2000ஐ நெருங்கும் கொரோனா

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,859இல் இருந்து 1,947ஆக அதிகரித்திருக்கிறது.

1,56,843 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் 1,944, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 3 பேர் என 1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 68 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் 2ஆவது நாளாக அதிகரித்து வருகிறது. சென்னையில் ஏற்கெனவே 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் 4வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 12 வயதிற்குட்பட்ட 108 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் 27 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,050ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 24 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் 50 வயதுக்குட்பட்டோர் 3 பேர். இணைநோய்கள் இல்லாதோர் 3 பேர். சேலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் இணைநோய்கள் ஏதும் இல்லாத நிலையில் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

image

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,934ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 2,193 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,02,627பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments