Ticker

6/recent/ticker-posts

Ad Code

மேற்கு வங்க ஆளுநரை பதவி நீக்கக் கோரி மம்தா மீண்டும் போர்க்கொடி

மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கார் ஒரு ஊழல்வாதி என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது, 1996ம் ஆண்டு நடந்த ஜெயின் ஹவாலா வழக்கில் ஆளுநரின் பெயர் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால் வழக்கு நீதிமன்றம் சென்ற போது தங்காரின் பெயர் நீக்கப்பட்டு விட்டதாகக் கூறிய மம்தா பானர்ஜி, இதற்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதிக்கு ஆளுநர் சென்று வந்ததைக் குறிப்பிட்ட மம்தா, ஆளுநர் தங்கார் மாநிலத்தை பிளவுபடுத்த நினைப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்நிலையில் முதலமைச்சரின் குற்றச்சாட்டினால் தாம் அதிர்ச்சியடைந்திருப்பதாக ஆளுநர் ஜகதீப் தங்கார் தெரிவித்துள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments