Ticker

6/recent/ticker-posts

Ad Code

சென்னை: தற்காப்புகலை பயிற்சிக்கு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை; பயிற்சியாளர் மீது வழக்கு

தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் பயிற்சியாளர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.அதில், கடந்த 2014ஆம் ஆண்டு, சென்னையில் கெபிராஜ் என்பவர் நடத்தி வந்த தற்காப்பு கலை பயிற்சியகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்ததாகக் கூறியுள்ளார். ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும் வழியில், பயிற்சியாளர் கெபிராஜ், காரில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாகவும், ஒத்துழைக்காததால் கொலை செய்து விடுவதாக தன்னை மிரட்டியதாகவும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரிடன் அளித்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் கெபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments