Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனா தடுப்பூசிகளுக்காக ஃபைஸர், மாடர்னா நிறுவனங்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை

கொரோனா தடுப்பூசிகளுக்காக ஃபைஸர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது இந்தியா நோய்த் தடுப்புக்காக 3 விதமான தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சூழலில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் மருந்துகளின் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யத் தயாரிப்பான ஸ்புட்னிக் வி சில தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments