Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்தியா-இங்கிலாந்து கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி; தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தீவிரமாக உள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேயில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments