Ticker

6/recent/ticker-posts

Ad Code

தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து கோவைக்கு வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் வருகிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். பிரதமர் வருகையை ஒட்டி தாராபுரத்தில் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.   தாராபுரம் கூட்டத்தை முடித்துக் கொண்டு கோவை வழியாக சென்னை வரும் மோடி, மாலை 4.25 மணிக்கு ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார். ஏ.எப்.டி.திடலில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி புதுச்சேரியில் ஆயிரம் போலீஸார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமரின் வாகனம் செல்லும் சாலைகளில் தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிரோன்கள் உள்ளிட்ட பறக்கும் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments