Ticker

6/recent/ticker-posts

Ad Code

அமெரிக்காவில் 90 சதவீத பேர் ஏப்ரல் 19ம் தேதி தடுப்பூசிக்கான தகுதி பெறுவர்: அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் மூன்று வாரங்களுக்குள் 90 சதவீத முதியோருக்கு தடுப்பூசி போட இருப்பதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஊசி போடும் முகாம்கள் அவர்கள் வசிக்கும் 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 17 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் தற்போது 40 ஆயிரம் முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தாம் பதவியேற்ற 100 நாட்களில் 2 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்திருப்பதாக முன்னர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார் .

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments