Ticker

6/recent/ticker-posts

Ad Code

அமர்நாத் பனிலிங்க யாத்திரை ஜூன் 28ல் ஆரம்பம்

ஜம்மு - காஷ்மீர் அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை ஜூன் மாதம் 28ந்தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு அடுத்த மாதம் முதல் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு - -காஷ்மீர் வங்கி, யெஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகளில், இந்த யாத்திரைக்கான முன்பதிவை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பனிலிங்கத்தை சராசரியாக ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments